அந்நாட்களில் வீட்டு சுவர்களில் வறட்டி காய வைக்கும் பழக்கம்
ஏன் இருந்தது?
நம் முன்னோர்கள்
ஒன்றும் மூடர்கள் அல்ல..!
நம் முன்னோர்கள்
பயன்படுத்திய பொருட்களில் பல நன்மைகள் இருக்கின்றன. இந்த காரணத்தினால் தான்
அவர்கள் இயற்கையாக மருந்துகளை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால்
மிகையாகாது.
அந்நாட்களில் வீட்டு
சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? என இங்கு
தெரிந்துக்கொள்வோம்.
ஒவ்வொரு பதினைந்து
நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கம்
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது.
அதற்கு முக்கிய
காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை
இருந்தாலும் சரியாக 28.35°ஊ வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த
விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.
அப்போதெல்லாம்
தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில்
அதற்கு இணையான மருந்துகள் உள்ளன என்பது தான் உண்மை.
நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி
என்பது அறிவியல். 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம்
தடுப்பூசிக்கு சமம். இதன்மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு
Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி வாழ்ந்தார்கள்
என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளிமண்டலத்தில்
இருந்து வரும் புறஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த
வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே
அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே.
இம்மாதிரியான வறட்டி
தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை
நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.
சுற்றிலும்
வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு
போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர்
அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள்
வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
வறட்டி தயாரிக்கும்
முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின்
சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறோம்.
இப்போது நாம் பேசும்
பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது. நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை
நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றைக் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்.
No comments:
Post a Comment