நம் முன்னோர்கள் ஏன்?
எதற்கு? இப்படி
செய்தார்கள்?
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?
பழந்தமிழர்
விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டிருந்தார்கள். அப்படி வீட்டிற்கு
வரும் விருந்தினருக்கு வாழை இலையில் தரையில் பரிமாறுவதை கௌரவமாக நினைத்தார்கள்.
அதில் முக்கியமானது
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு
வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில்
உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீக சௌகரியம் என ஆகிவிட்டது.
முதலில் முன்னோர்கள்
இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும்போது நாம்
காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க
விட்டு அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே
அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.
காலை மடக்கி சுக
ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த
ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு
ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை நம்
முன்னோர்கள் கடைபிடித்தனர்.
செம்பு குடத்தில் தண்ணீர் எதற்கு?
செம்பு குடத்தில் தண்ணீர் எதற்கு?
முந்தையக்
காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து
அனுப்புவார்கள். தம்பதிகள் நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும்
என்பதற்காகத்தான்.
செம்பு
பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்தால், மனிதர்களுக்குப்
பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இருக்காது.
செம்பு பாத்திரம்
அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல
கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால்
உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது
ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக
ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன்
அமையும்.
மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை
தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக்
குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய்
உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளின் வரவும் தடைபடும்.
செம்பு கலந்த
நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும்
குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்சனையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக
கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும்
குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமையும் கிடைக்கும்.
அதனால்தான் அந்த
காலங்களில் நம் முன்னோர்கள், செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து
வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர்
என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல்
போய் விட்டன.
No comments:
Post a Comment