Eat these foods to get the immune system.......!! - Go General

Education, General tips and Health tips

Monday 19 March 2018

Eat these foods to get the immune system.......!!


நோய் எதிர்ப்பு சக்தியை பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !!
பிறக்கும் போது இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் ஒரே அளவில் தான் இருக்கும். ஆனால், அந்த நோய் எதிர்ப்பு சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறைகிறது. 

சரிவிகித உணவு சாப்பிடாத காரணத்தால் ஏற்படும் சத்துக்குறைபாடு, உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், பலவீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், போதைப்பொருள் பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே நம் உணவு முறைகளால் மட்டுமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள் :

பாதாம் பருப்பில் வைட்டமின்-, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம் சிறந்த பலனை பெறலாம். வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாக செயல்படத் தூண்டுகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மேலும் இதில் இருக்கும் ஓமேகா-3 சத்து, கெட்ட கொழுப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது. 

பொதுவாக ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளைபழம் போன்ற பழங்களை சாப்பிடுவோம். ஆனால் அதை தவிர குழந்தைகளுக்கு அதிகளவில் வைட்டமின் சி உள்ள பழங்களான பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு என்று புளிப்புத் தன்மையுடைய பழவகைகளை கொடுப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களையும் தடுக்கும் தன்மை இந்த பழங்களுக்கு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு, தினமும் அல்லது வாரம் இரண்டு முறை கீரை வகைகள் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளது. கீரை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கலாம்.

இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு காளான்கள் பெரிதும் உதவுகிறது. காளானில் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து உள்ளது. எனவே, உடலில் ஏற்படும் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்தி காளானில் அதிக அளவில் உள்ளது. நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது. 

மேலும், கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் இயற்கையாக கிடைக்கும் இளநீரை பருகுவதன் மூலம் தாய்க்கும் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நன்மை தரும். இளநீரில் மின்பகுபொருள் அதிகமாக உள்ளதால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

No comments: